Sunday, June 12, 2011

Resolutions on Consumer Meet

மின்னூரில் அரசு பாலிடெக்னிக்: நுகர்வோர் மன்றம் வலியுறுத்தல்

First Published : 12 Jun 2011 02:50:14 PM IST
Last Updated :
ஆம்பூர், ஜூன் 11: மின்னூரில் மூடப்பட்டுள்ள டால்கோ தொழிற்சாலை வளாகத்தில் அரசு பாலிடெக்னிக் அல்லது சிவில் சப்ளை கிடங்கு அமைக்க வேண்டும் என ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஆம்பூர் நகரில் நிறைவு பெறாமல் உள்ள சிறப்பு சாலை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ஆம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள 2 மற்றும் மூன்றாம் நடைமேடைகளுக்கு வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் சென்று வர சாய்வு தளத்துடன் கூடிய மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று அம்மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: